எவ்வளவோ யோசித்தாகி விட்டது,
இன்னும் தாமதம் வேண்டாம்!
மௌனம் என்பது
என்றுமே பதில் ஆகிவிடாது!
சிரிப்பு -அழுகை
சலனமில்லா பார்வை - முறைத்தல்
வெற்றுச் சிரிப்பு -
எல்லாம், பார்ப்பவர்க்கு மட்டுமே,
எல்லாம், அர்த்தம் சொல்லிவிடாது!
ஆழ் மனதின்
கூக்குரல்,
கடல் அலை ஓசையாய்,
என்றுமே உறங்குவதில்லை!
நினைத்ததை சொல்லவும்
சொன்னதை செய்யவும்
எந்த மனிதருக்கும் உரிமை உண்டு!
அதில், ஒரு துளி ஏனும்
சுய நல நஞ்சு
இருக்குமே ஆனால்,
அதைக்காட்டிலும்,
மௌனமே புனிதமானது!
சலனமில்லா பார்வை - முறைத்தல்
வெற்றுச் சிரிப்பு -
எல்லாம், பார்ப்பவர்க்கு மட்டுமே,
எல்லாம், அர்த்தம் சொல்லிவிடாது!
ஆழ் மனதின்
கூக்குரல்,
கடல் அலை ஓசையாய்,
என்றுமே உறங்குவதில்லை!
நினைத்ததை சொல்லவும்
சொன்னதை செய்யவும்
எந்த மனிதருக்கும் உரிமை உண்டு!
அதில், ஒரு துளி ஏனும்
சுய நல நஞ்சு
இருக்குமே ஆனால்,
அதைக்காட்டிலும்,
மௌனமே புனிதமானது!
No comments:
Post a Comment