Saturday, October 1, 2016

ஒரு மாலை மழைப் பொழுது!

எங்கோ தேவதைகள் சிரிக்க 
மழையாய் மண்ணில்!

அந்த கணப் பொழுதில் 
பேருந்தின் ஜன்னல் வழியாய் 
மழைத் துழியிநூடே 
உன் முகம் வழுக்கட்டயமாய் 
என் கண்களுக்குள் எட்டிப் பார்கிறது

கனவோ .. நினைவோ ...
என்னவென்பது தெரியவில்லை
தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை!
--
காலை முதல் சுட்டு எரித்த 
வெப்பக் காற்று 
என்ன மாயம் கண்டது ?

மண் வாசம் கனிந்து,
சில்லிட்டு ,
பட்டாம் பூச்சியாய் 
முகத்தை வருட வந்திருக்கிறது?

இப்படியாய் நீயும் 
என் செய்தாய் என்னை ?

உன்னால்,
மழையும் அலையும் 
மிகவும் பிடித்து விட்டது 
என் மனதாய்
அவை பிரதிபலிப்பதால்!

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...