உன்னை காண அவளுக்கு எத்தனை நாட்களாய் ஆசை. உன்னை பற்றி படித்திருக்கிறாள், அவள் நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறாள்!!உன் புகைப்படங்களைப் பார்த்து ரசித்து, உன்னை காண விரும்பியிருக்கிறாள்!!!
உன்னைக் காண அவள் இன்று வருகிறாள்.
எங்குமே அவளை அழைத்துச் செல்லாத, அவள் தந்தை என்ன நினைத்தாரோ தெரியவில்லை...
அழைத்து வருகிறார் அவளை, உன்னைக் காண!!!
மழலை மறந்த, வீட்டுப்படி தாண்டா பேதை அவள் ...
உன் அருவிச் சாரலோடு, மழைச் சாரலைப் பொழிய மறந்து விடாதே, உன் கரங்களைத் தொட்டுப் பார்ப்பவர்கள் பலராய் இருக்கலாம்...ஆனால் இவளுக்குப் பார்க்க கிடைத்த ஒரே அதிசயம் நீதான்.
அவள் மனதை நனைத்த மழைச் சாரலே... ஏ குற்றால அருவியே ஏமாற்றி விடாதே அவளை!!!
உன்னைக் காண அவள் இன்று வருகிறாள்.
எங்குமே அவளை அழைத்துச் செல்லாத, அவள் தந்தை என்ன நினைத்தாரோ தெரியவில்லை...
அழைத்து வருகிறார் அவளை, உன்னைக் காண!!!
மழலை மறந்த, வீட்டுப்படி தாண்டா பேதை அவள் ...
உன் அருவிச் சாரலோடு, மழைச் சாரலைப் பொழிய மறந்து விடாதே, உன் கரங்களைத் தொட்டுப் பார்ப்பவர்கள் பலராய் இருக்கலாம்...ஆனால் இவளுக்குப் பார்க்க கிடைத்த ஒரே அதிசயம் நீதான்.
அவள் மனதை நனைத்த மழைச் சாரலே... ஏ குற்றால அருவியே ஏமாற்றி விடாதே அவளை!!!
No comments:
Post a Comment