Saturday, October 1, 2016

ஒரு சொல்!

தினமும் அந்த வண்டிப் பக்கம் என் கண்ணு போகாம இருந்ததில்ல ...
பஸ்சுக்காக காத்துகிட்டு இருக்க கூட்டத்தையும் தாண்டி, என் கண் அங்க தன் போகும் :) 
அங்க இருந்து வர தோசை வாசனை அப்படி!
    சாதாரண தள்ளு வண்டி, அதுல ஒரு அடுப்புல  ஒரு தோசை சட்டி , ஒரு அடுப்புல பணியாரச்சட்டி, ஒரு ஓரத்துல இட்லி சட்டில இருந்து ஆவி பறந்துட்டு இருக்கு ...என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி!
    அத சுத்தி ஆளுங்க கைல தட்டு வச்சுட்டு, அடுத்த இட்லி நமக்குதான்னு ஏக்கமா ஒரு பார்வை பார்த்துட்டு இருக்கறத பார்த்தாவே பசி எடுத்திடும் ...
    எப்ப இந்த வண்டிய தாண்டி போகும் போதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வரும் .......
நான் சின்ன பிள்ளைய இருந்த போது, நான், அம்மா, அக்கா மூணு பேரும் பஜார் போனப்போ ரோட்டு ஓரத்துல இருந்த தள்ளு வண்டில "மசாலா பூரி" வாங்கி சாபிட்டுட்டு இருந்தோம். அந்த வழில வண்டில போன எங்க மாமா, வண்டிய நிறுத்திட்டு வந்து அம்மாக்கு சரி 'டோஸ்' ...பிள்ளைங்கள கூட்டிட்டு வந்து இப்படி ரோட்டுல நின்னு சாப்பிட வைக்கிரியான்னு ... எங்க ரெண்டு பேர்கிட்டயும் "கண்ணு ...இனி ஏதாது வேணும்னா, வீட்டுக்கு பார்சல் வங்கி போயி சாப்பிடனும்.ரோட்டுல நின்னு சாப்பிட கூடாது என்ன ? சரியா?"
    அந்த வார்த்தைக்கு மரியதையான்னு தெரில ...
ஆனா என் கால் ரோட்டு கடை பக்கம் அடி எடுத்து வைக்க என் மனசு சமதிச்சதில்ல...
நாம கொடுத்து வைச்சது அவ்ளோ தான் ....தோசைக்கு :)

No comments:

Post a Comment

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...