Thursday, June 4, 2020

அவன் - சரவன்

அற்பமாய் நான்கேள்வி கேட்டு

உன்னை ரணமாக்கி செய்த போதும்


என் தோளிற்காய்ஏங்குவாய் நீ !


நான் சிரிக்காததால்


    நீ கோபித்துக் கொண்ட


நாட்களில் சாரல் மழை !


நீ மௌனம் 


    சாதித்த நொடிகளில் 


இடியுடன் கூடிய 


    பலத்த மழை 


மனதில் !


திருமணத் திருவிளையாடல்களை 

திக்குத் தெரியாமல் 
அனைத்துக் கொள்ள 
அதில் வீழ்ந்த சுறா நீ

முதல் வருடத்தில் 

நீ எனக்கானவன் 
என நான் செய்த 
போரில் நம்மை 
இழந்தோம் 

எந்த ஒரு நாளையும் 

நீ இல்லாமல் 
யூகிக்க இயலவில்லை 
என் ஆன்மாவாகி இருக்கிறாய் நீ 

உன் குழந்தை சிரிப்பின் அடிமை நான் 


எனக்கான உலகத்தில் ஆண்டவன் 

எனக்களித்த ஆனந்த பரிசு நீ 

என்னை உனதாக பார்க்காமல் 

உன்னையாகவே பார்க்கும் நீ 
கோடியில் ஒருவன் 



----


வாரத்தின் ஐந்து நாட்களை - கழிப்பதே 

நீ ஆனந்தக் கூப்பாடு போடும் 

அந்த வெள்ளிக் கிழமை இரவை சுகிக்கவே

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...