Saturday, October 1, 2016

இவ‌ர்க‌ளும் குழ‌ந்தைக‌ள் தாம்!!!

குழந்தைகளைப் பார்த்து ரசித்ததுண்டா?
சேஷ்டை செய்யும் குழந்தை?
நச்சரிக்கும் குழந்தை?
அழுது கொண்டே இருப்பவன்?
நம்மை சிரிக்க வைப்பவன்?
துறுதுறு வென்று இருப்பவன்?
மழலையை பொழிபவன்?

இவன் எப்படி இருந்தாலும்
ரசித்திருக்கிறேன்...சிரித்திருக்கிறேன்...

இன்றோ ஏனடா இவனைப் பார்க்கிறோம்
என்று நினைக்க வைத்து விட்டார்களே !?
"அக்கா...அக்கா... இதை வாங்கிக்கோங்க
சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு...
பத்து ரூபாய்... தான் கா..."
எத்தனை பேரிடம் தான் பத்து ரூபாய் கொடுத்து வாங்குவது??

அந்தப்பொழுதில், ஐந்து நிமிடமாவது
அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி நினைத்துக்கொண்டு ந‌ட‌க்கிறேன்
நினைத்துக்கொண்டு ம‌ட்டுமே ...
எந்த‌ச் சல‌ன‌மும் இல்லாம‌ல் ...

No comments:

Post a Comment

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...