அந்தப் கண்களுக்குள்
எனை எப்படித் தொலைத்தேன்
நான் அறியேன் பராபரமே
என் தேடலுக்கான தீர்வாய்
என் தேடலின் தேடலாய்
நீ எப்படி அமைந்தாய்
நான் அறியேன் பராபரமே
சில்லிட்டு நீ சீறினாலும்
சிதறாமல்
உனக்குள் அடக்கமாய் நான்
ஏனோ ?
நான் அறியேன் பராபரமே
வெறுப்புத் தீயாய் நான்
எனை ஆட்கொள்ளும்
நீராவி நீ
எங்கிருந்து வந்தாய் ?
நான் அறியேன் பராபரமே
வாரி இறைக்கும் வள்ளல் அப்பன் நீ
உன் ஒரு காய் தேடிய ஓசை நான் ! ஏனோ ?
நான் அறியேன் பராபரமே
பிரபஞ்சத்தில் நான் ஒழித்து
வைத்திருந்த ரகசியங்களை
உனக்காய் அவிழ்த்திருந்தேன்
எனை அறியாமல் ஏனோ ?
நான் அறியேன் பராபரமே
பூலோகத்தின் எத்தனை வழிகளோ
அத்தனையையும் உன்னோடே
பிராயணிக்க, எத்தனித்து காத்திருக்கிறேன்
எதனாலோ ?
நான் அறியேன் பராபரமே