Sunday, January 21, 2018

தெளிவில்லா நிலை

தெளிவில்லா நிலை 

எப்பொழுதும் போல் சிறுவயது முதலே ஞாயிற்றுக் கிழமை முடிவடைவதில், ஏதோ ஒரு கருக்கல் கரு மேகமாய் மனதில் சூழ்ந்து ஆட்கொள்கிறது

வெள்ளிக் கிழமை தோய்ந்து தேயும் போது மனதில் பொங்கி எழும் உற்சாகம், என்னை வரப்போகும் இரு நாட்களில் கேள்வி கேட்க எவரும் இல்லை என்ற எனக்கான முதலாளித்துவம் ஓங்கி எழும்.

சின்ன சின்ன இலட்சியங்கள் பெரிய சாகசங்கள் சிறு குறிக்கோள்கள் அத்தனையையும் இந்த இரு நாட்களில் நாம் சாதித்து  விடலாம் என்ற தப்புக் கணக்கை இந்த ஞாயிற்றுக் கிழமை முடியும் போது மட்டுமே உணர முடிகிறது.

இந்த வாழ்க்கையில் நமக்கான தேடலில் பிறருக்கான சந்தோஷத்திற்காக என்னின் காலத்தை பரிசை அளிக்க என் இலட்சியங்கள் சுக்கு நூறாய்....

என்ன தான் தேடுகிறேன் ? இதற்கான விடையை நான் அறிந்து தெளியும் போது நான் பூரணம் அடைவேன் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...