அருவெறுப்பு கம்பளிப்பூச்சி யாய் பிறந்தாய்
காய்ந்த சிறகாய் சிறையானாய்
சிறையை உடைத்து சிறகை விரித்தாய்
கண்களுக்கு ஆனந்தம் படைத்தாய்
அருவெறுப்பு இப்போது அழகாய்?!
உன் சின்னஞ்சிறிய உடலுக்குள்
உள்ள மூளை
என்ன யோசிக்கும்
அந்த விதிக்கப்பட்ட பதினெந்து நாட்களில்?
உலகின் அழகிய மலரில்
தேன் எடுக்கவா?
பறந்தே சென்று உலகின்
அழகை ரசிக்கவா?
உயிர் வாழ வேண்டி
யுக்தி தேடவா?
எந்த மலரிலும்
அதிக நேரம்
நீ அமர்ந்து கண்டதில்லை
அனைத்து மலரையும்
ருசிக்க எத்தனமா?
எது எப்படியோ
உன் பரபரப்பு
உறுதிச் சுறுசுறுப்பு
உடல் நிலை - மாறி மாறி
உயிர்த்து எழத் துடிக்கும் - உன்னதமும்
கண்களை மட்டுமல்ல
மனதையும் குளிர்விக்கிறது!
No comments:
Post a Comment